95வது நாள் சத்தியாக்கிரக போராட்டத்தில் அம்பாறை பட்டதாரிகள்

நிரந்த நியமனம் வழங்குமாறு கோரி 95வது நாளாகவும் அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலர் நோன்புடன் போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பட்டதாரிகள் கிழக்கிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் 4500 பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்வேண்டும் என்றே நாம் கோருகிறோம். எனினும் கிழக்கு முதலமைச்சர் முதற்கட்டமாக 1700 பேருக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என்பதே எமது கோரிக்கை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்

தென்னிலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய துன்பங்களில் தாம் பங்குகொள்வதாகவும் அவர்களுக்காக பிரார்த்திப்பதாகவும் நேற்றைய தினம் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435