இலங்கைக்கு அதிக தொழில்வாய்ப்புக்களை வழங்க பஹ்ரைன் இணக்கம்

இலங்கையருக்கு வழங்கப்படும் தொழில்வாய்ப்புக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த பஹ்ரைன் அரச இணக்கம் தெரிவித்துள்ளது என்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நீதி மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தனது நேற்றைய பஹ்ரைன் விஜயத்தின் போது அந்நாட்டு தொழில் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் ஜமீல் பின் மொஹம்மதை சந்தித்தபோதே இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி, முகாமைத்துவம், கணினி நிபுணத்துவம், தகவல் தொழில்நுட்பம் போன்ற உயர்துறைகளில் இலங்கையருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்று இதன்போது அமைச்சர் தலத்தா அத்துகோரள பஹ்ரைன் அமைச்சரிடம் தெரிவித்தார்.

பஹ்ரைனில் சுமார் பதினோராயிரம் இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் தொழில் நடவடிக்கை தொடர்பில் பஹ்ரைன் அரசு பாராட்டுகிறது. அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளையும் எமது அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. பஹ்ரைனில் உள்ள தொழில்நுட்ப வசதிகளை எதிர்காலத்தில் இலங்கைக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம். அத்துடன் இலங்கை அதிக எண்ணிக்கையான தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கவும் முயற்சிப்போம் என்று அமைச்சர் ஜமீல் பின் மொஹம்மது அமைச்சர் தலத்தாவிடம் தெரிவித்துள்ளார்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435