புதிய வர்த்தக கொள்கையை உருவாக்க நிபுணர் குழு: அமைச்சரவை தீர்மானம்

நாட்டுக்கு பொருத்தமான புதிய வர்த்தக கொள்கையை தயாரிப்பதற்காக நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை அமைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரச மற்;றும் தனியார் சேவை பணியாளர்கள், நிபுணர்கள், தொழில்முயற்சியாளர்கள் ஆகியோர் அடங்கும் வகையில் இந்தக் குழுவை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்;சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குழுவில் நியமிக்கப்படவுள்ள நிபுணர்கள், தொழிற்துறை சார்ந்தோர் மற்றும் முதலீட்டாளர்களின் பெயர் விபரத்தை அடுத்தவாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வழிமூலம்: லங்காதீப

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435