BOI தொழிற்சாலைகளுக்கு ஊடரங்கு அனுமதிபத்திரம் வழங்க தீர்மானம்

மேல் மாகாணம் உட்பட நாட்டில் பல பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தபோதி்ல் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கு சொந்தமான தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முதலீட்டு வலயங்கள் தவிர்ந்த ஏனைய இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச்சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளும் இதில் உள்ளடங்குகின்றன.

அதற்கமைய, இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச்சபையின் உத்தியோகப்பூர்வ இணையதளமான www.investsrilanka.com இல் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கமைய அவசியமான ஊரடங்கு சட்ட அனுமதிபத்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்கள் சரியான முறையில் பின்பற்றி தொழிற்சாலைகளை இயக்குவதற்கு இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச்சபை அனுமதி வழங்கவுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435