UAEஇல் ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் 30 பெண்கள் மயிரிழையில் உயிர்தப்பினர்

 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் ரஸ் அல் கஹிமா நகரில் வெளிநாட்டு பெண்கள் தங்கியிருக்கும் விடுதி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ அனர்த்தம் காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

தீ அனர்த்தம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த தங்குமிட விடுதியில் 30 பெண்கள் வரை தங்கியிருந்துள்ளனர்.

இதன்போது, பெரும் போராட்டத்தின் மத்தியில் அவர்களை பாதுகாப்பாக மீட்டெடுக்க எமிரேட்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
எனினும், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியபப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சிவில் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர், பிரிகேடியர் மொஹமட் அப்துல்லா அல்-ஸாபி தெரிவித்துள்ளார்.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435