அபுதாபி வாழ் மக்களே! கடலுக்கு காற்று வாங்க செல்வதை தவிர்க்கவும்

எதிர்வரும் திங்கட் கிழமை (18) ஆம் திகதி வரை கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அபுதாபி தேசிய வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

இன்று (16) அதிகாலை தொடக்கம் அபுதாபியில் வடமேற்காக கடுமையான காற்று வீச ஆரம்பித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள வானிலை அவதான நிலையம் எதிர்வரும் திங்கட் கிழமை வரை அதன் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இக்காற்றானது கடுமையான தூசையும் மணலையும் அள்ளி வீசுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றமையினால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் சாத்தியங்கள் காணப்படலாம் என்று தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம் வரலாறு காணாத வகையில் நாட்டில் வெப்பநிலை குறைவடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

அராபிய வலைக்குடா கடலில் கடலலைகளின் வேகம் கடுமையாகலாம் என்றும் ஓமான் கடற்பகுதியிலும் சற்று அதிகமாக கடல் அலைகள் எழும்பலாம் என்றும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435