அவுஸ்திரேலியாவில் பெண்ணை அடிமையாக வைத்திருந்த இலங்கை தம்பதி

கடந்த 8 வருடங்காளாக ஒரு பெண்ணை அடிமை போல நடத்தி வந்தனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை தம்பதி மீது அவுஸ்திரேலிய நீதிமன்றில் வழங்கு தொடரப்பட்டுள்ளது.

குமுதினி கண்ணன் (48), கந்தசாமி கண்ணன் (52) என்ற இருவரும் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் 2015 ஜூலை மாதம் வரையில் மெல்போனில் உள்ள அவர்களுடைய வீட்டில் குறித்த பெண்ணை அடிமைப் போன்று வைத்திருந்தனர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் அடுத்த ஆண்டு மாதம் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த பெண்ணின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படுவதாக அவருடைய சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

பணியாட்களை அடிமையாக வைத்திருந்தால் அவுஸ்திரேலிய சட்டப்படி குறைந்தது 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435