ஆசிய மோட்டார் சைக்கிள் சாரதிக்கு 10,000 ரியார் அபராதம்

சிவப்பு சமிக்​ைஞயை கவனிக்காது சென்று மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்தை ஏற்படுத்திய ஆசிய நாட்டைச் மோட்டார் சைக்கிள் சாரதியொருவருக்கு 10,000 கட்டார் ரியால் அபராதம் விதித்து டோஹா குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பிட்டுள்ளது.

போக்குவரத்து பொலிஸாரின் சாட்சி மற்றும் விசாரணைகளை அடிப்படையாக கொண்டு நேற்றுமுன்தினம் (24) நீதிமன்றம் தீர்ப்பிட்டுள்ளது.

சிவப்பு விளக்கை ஒளிர்ந்து கொண்டிருப்பதை கவனத்தில் கொள்ளாது தொடர்ந்து பயணித்து மற்றொரு வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதால் சிறு காயங்களுக்குள்ளான குறித்த சாரதி தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது இயலாமை மற்றும் அங்கவீனங்களை சுட்டிக்காட்டி எந்தவொரு மருத்துவ சான்றிதழ்களையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கவில்லை.

பொறுப்பற்ற வகையில் வாகனமோட்டியமை வீதிப் போக்குவரத்து சட்ட திட்டங்களை மதியாமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் குறித்த நபர் குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பிட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435