ஓமான் சுற்றுலா வீஸா தொடர்பில் புதிய சட்டம்

சுற்றுலா வீஸாவை பயன்படுத்தி வர முயலும் சில நாடுகளைச் சேர்ந்த பெண்களை நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பில் புதிய சட்டங்களை ஓமான் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் ஓமானுக்குள் நுழையும் போது நாடு திரும்புவதற்கான விமான டிக்கட் மற்றும் குறைந்தது 4 நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கான அறை பதிவு செய்தமைக்கான ரசீது இல்லையேல் விமான நிலையத்திலிருந்தே திருப்பியனுப்ப ஓமான் அரச பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நாட்டில் விபசாரம், ஆட்கடத்தல் மற்றும் போதை பொருள் விற்பனை என்பவறை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய பாதுகாப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஓமான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டல் குடியிருப்பு மற்றும் விடுதிகளுக்கு இந்த சட்டம் செல்லுபடியாகாது என்று தெரிவித்துள்ள அந்நாட்டு பொலிஸார், புதிய சட்டத்தின் கீழ் சுற்றுலா வீசாவை பயன்படுத்தி தங்குவதற்கான காலம் குறைக்கப்பட்டு 10 தினங்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும் அது எந்த காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தை மீறும் சுற்றுலா பிரயாணிகள் மீண்டும் நாட்டுக்குள் நுழைய முடியாத வகையில் தடை செய்யப்படுவார்கள் என்றும் அந்நாட்டில் தங்கியிருந்து பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு 3 மாதம் தொடக்கம் 3 வருடம் வரையான சிறைத்தண்டனையும் 20- 100 வரையான ஓமான் ரியால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாலியல் தொழிலுக்கு உதவுகிறவர் மற்றும் நடத்துகிறவர் அனைவருக்கும் இதே தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435