இனி சம்பளத்தை வங்கியில்வைப்பிலிடத் தேவையில்லை

ஐந்து பேருக்குக் குறைவான ஊழியர்களை கொண்டு நடத்தப்படும் வியாபாரத்தில் ஊழியர்களின் சம்பளத்தை நேரடியாக அவர்களுக்கு வழங்க முடியும் என்றும் வங்கி வைப்பிலிடவேண்டிய அவசியம் இல்லையென்றும் குவைத் மனித வளத்துக்கான பொது அதிகாரசபை அறிவித்துள்ளது.

ஊழியரின் நலன்கருதி குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரசபையின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு சம்பளத்தை நேரடியாக தொழிலாளர்களுக்கு வழங்கும் தொழில் வழங்குநர்கள் அவை தொடர்பில் பதிவு செய்யப்படுவது அவசியம் என்றும் அதற்கான பதிவுப் புத்தகங்களை அதிகாரசபையே அச்சிட்டு தொழில் வழங்குநர்களுக்கு வழங்கவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435