இலங்கையர்கள் குவைத் செல்ல அனுமதி கிடைக்குமா – இந்த வாரம் தீர்மானம்

இலங்கை, இந்தியா உட்பட 32 நாடுகளைச் சேர்ந்தவர்கள் குவைத்திற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என்று  அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

குவைத் விமான நிலையம் வழியாக வணிக அடிப்படையிலான விமானங்களை அனுமதிக்கும் முடிவு குவைத்தில் உள்ள சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று அரசு தொடர்பு மையத்தின் தலைவர், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் முஸ்ரேம்மை மேற்கோள் காட்டி செய்திகள் வௌியாகியுள்ளன.

32 நாடுகளுக்கான தடையை நீக்குவது குறித்த முடிவு அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பட்டியலில் உள்ள நாடுகளின் (கொவிட் -19) கொரோனா வைரஸ் பாதிப்பு நிலைகளை கருத்தில் கொண்டு , இந்த பட்டியல் எந்த நேரத்திலும் அதிகரிக்கவோ குறைக்கவோ உட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435