இலங்கை உள்ளிட்ட 39 நாடுகளுக்கு சவுதி அரேபியா தற்காலிக பயணத்தடை

இலங்கை உள்ளிட்ட 39 நாடுகளுக்கு சவுதி அரேபியா தற்காலிக பயணத் தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று முதல் இந்த பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய, இலங்கை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும், இத்தாலி, ஜேர்மனி, ஃப்ரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம், ஈராக், குவைட் உள்ளிட்ட மேலும் சில மத்திய கிழக்கு நாடுகளுக்கு சவுதி அரேபியா இவ்வாறு  பயணத்தடை விதித்துள்ளது.

குறித்த நாடுகளை சேர்ந்தவர்கள் தமது நாட்டுக்கு வருகை தருவதற்கும், தங்களது நாடுகளை சேர்ந்தவர்கள் குறித்த நாடுகளுக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கும் சவுதி அரேபியா பயணத் தடை விதித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435