இலங்கை பணிப்பெண்மீது கொலை மற்றும் கருக்கலைப்பு குற்றச்சாட்டு!

குவைத்தில் பணியாற்றும் இலங்கை பணிப்பெண் ஒருவர் மீது மனித கொலை மற்றும் கருக்கலைப்பு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குவைத்தில் பணிப்பெண்ணாக உள்ள இலங்கைப் பெண் ஒருவர் திருமணத்துக்கு முன்னரே கருவுற்றிருந்த நிலையில், பிரசவத்தினத்தன்று யாருடைய உதவியையும் கோராமல், தனித்து குழந்தையை பிரசவிக்க முயன்றுள்ளார்.

இதனை அறிந்த குறித்த இலங்கை பணிப்பெண்ணின் தொழில் தருணர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

எனினும், அந்தக் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.

இதையடுத்து, குறித்த இலங்கை பணிப்பெண்மீது குவைத் பொலிஸாரால் மனித கொலை மற்றும் கருக்கலைப்பு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தகவல் – குவைத் டைம்ஸ்/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435