இஸ்ரேலில் பணியாற்ற வாய்ப்பு

இஸ்ரேலில் முதியோர் பராமரிப்பு பணியாளராக பணியாற்றுவதற்கு பொருத்தமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் இஸ்ரேல் அரசிற்கும் இடையிலான ஒப்பந்தத்தையடுத்து முதற்கட்டமாக 50 பேருக்கு இவ்வாய்ப்பு வழங்கப்படவுள்ளது என்று பணியகம் தெரிவித்துள்ளது.

படுக்கையிலுள்ள முதியோரை பராமரிப்பதற்காக இணைத்துக்கொள்ளும் பணியாளர்களின் ஆங்கில புலமை தொடர்பில் பரீட்சிப்பதற்கான பரீட்சையொன்று நடத்தப்பட்டே பணியாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அது தவிர 25- 45 வயதுடையவராகவும் 1.5 மீற்றர் உயரமுள்ளவராகவும் இருக்க வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி.

மேலதிக விபரங்களை www.slbfe.lk என்ற இணையதள முகவரியில் பிரவேசித்து பெற்றுக் கொள்ளலாம்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435