உலகின் மிகப்பெரிய எரிபொருள் ஏற்றுமதி கம்பனி ஆட்குறைப்பு நடவடிக்கையில்

உலகின் மிகப்பெரிய எரிபொருள் ஏற்றுதி கம்பனியான சவுதி அரம்கோ (Saudi Aramco) ஆட்குறைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

விற்பனை சந்தையில் எரிபொருள் விலை குறைப்பு காரணமாக வௌிநாட்டுப் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்யப்படுவதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சவுதி அரம்கோ நிறுவனத்தில் சுமார் 80,000 பேர் வரை பணியாற்றுகின்றனர். வருடாந்தம் ஆட்குறைப்பை மேற்கொள்கிறது. எனினும் இம்முறை வழமைக்கு மாறாக அதிக எண்ணிக்கையானவர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.

“அரம்கோ சிக்கலான, மாறிவரும் வணிகச் சூழலுக்கேற்ப தம்மை மாற்றி வருகிறது. “இந்த நேரத்தில் எந்தவொரு செயலின் விவரங்களையும் பற்றிய தகவல்களை நாங்கள் வழங்கவில்லை, ஆனால் எங்களது அனைத்து செயல்களும் நீண்டகால வளர்ச்சியை மையமாகக் கொண்டு போட்டித்தன்மையை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன.”

அரம்கோ நிறுவனத்தின் வருடாந்த இலாபம் இவ்வருடம் முதல் காலாண்டில் 25 வீதத்தால் சரிந்துள்ளது. கொவிட் 19 காரணமாக இக்கம்பனிக்கு ஏற்பட்டுள்ள நட்டம் 62.5 ரியால் ($16.6 billion) ஆகும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435