எங்களை விரைவில் திருப்பி அனுப்புங்கள்: கட்டாரில் உள்ள இலங்கையர்கள்

கொரோனா தொற்றினால் கட்டாரில்  நிர்க்கதிக்குள்ளாகியுள்ள தங்களை நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையை சேர்ந்த குழு ஒனறு கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்று முன்தினம் (06) தூதரகத்திற்கு சென்ற குழுவினர் தங்களை விரைவில் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று வேண்டிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட  இலங்கையர்கள் குழு ஒன்று இலங்கை தூதரகத்தை அணுகி தங்களின் பிரச்சினைகள் குறித்து தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

தூதரக அதிகாரி அவர்களின் சூழ்நிலைகளுக்கு செவிசாய்த்து,  அவர்களின் நிலைமையை எளிதாக்குவதற்கான  அனைத்து வழிகளிலும் அவர்களுக்கு உதவுவதாக தூதரக அதிகாரிகள்  உறுதியளித்துள்ளனர்

இதுவரை, கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம், பாதிக்கப்பட்ட  இலங்கையர்களை டோஹாவிலிருந்து கொழும்புக்கு அழைத்துச் செல்ல இரண்டு விமானங்களை ஏற்பாடு செய்ததோடு, தூதரக அதிகாரிகள்  கூற்றுப்படி மேலும் விமானங்களுக்கான ஏற்பாடுகள் நடப்பதாக தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435