எஜமானால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பராமரிப்பாளர்

பராமரிப்பு சேவையாளராக பணிக்கு வந்த 31 வயதான பெண் 58 எஜமானால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காணொளி இம்மாதம் 8ஆம் திகதி இணையதளத்தில் தரவவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த பராமரிப்பாளரை தாய்வான் நாட்டைச் சேர்ந்த எஜமானே இவ்வாறு துஷ்பிரயோகப்படுத்தியுள்ளார் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த டிசம்பர் மாதம் குறித்த நபரின் வீட்டுக்கு பராமரிப்பாளராக பணிக்குச் சேர்ந்த இந்தோனேஷிய பெண் கடந்த ஜூன் மாதம் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். குறித்த காணொளியில் பெண் தன்னை எதுவும் செய்யவேண்டாம் என்று கதறியழுதபோதிலும் பலவந்தமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றமை பதிவாகியுள்ளது.

காணொளி இணையதளத்தில் வௌியாகிதற்கு மறுநாளான 9 ஆம் திகதி தாய்வான் பொலிஸார் அப்பெண் பணியாற்றிய வீட்டுக்கு விசாரணைக்காக சென்றபோதிலும் பாதிக்கப்பட்ட பெண் மயக்கநிலையில் இருந்தமையினால் தகவல்கள் பெறமுடியாமல் போனதாகவும் மீண்டும் சென்றபோது தற்கொலை முயற்சியினை மேற்கொண்டமையினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கையின் மணிக்கட்டு பகுதியில் 6-7 வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பகமொன்றில் தங்க வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சந்தேகநபரை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் பிரதேசத்தை விட்டு தப்பியோடியுள்ளமையினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்பான செய்திகளுக்கு

உங்கள் அவுஸ்திரேலிய கனவு நனவாக

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435