மிஹின் லங்காவின் ஓமானுக்கான சேவை இம்மாதத்துடன் நிறைவு!

மிஹின் லங்கா ஓமானுக்கான விமான சேவையை இம்மாதம் 30 ஆம் திகதியுடன் நிறுத்திக்கொள்ளும் என்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மஸ்கட் வதிவிட முகாமையாளர் தீபால் பல்லேகங்கொட தெரிவித்துள்ளார் என்று ஓமான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டேபார் 25ஆம் திகதி ஓமானுக்கான விமானசேவையை மிஹின் லங்கா ஆரம்பித்தது.வாராந்தம் 4 விமான சேவையாக ஆரம்பித்த மிஹின் லங்காவின் ஓமானுக்கான சேவை பின்னர் நாளாந்தமாக மாற்றப்பட்டது. கடந்த வருடம் மட்டும் சுமார் 40,000 பேர் மிஹின் லங்கா விமான சேவையை பயன்படுத்தியுள்ளனர்.

இச்சேவை நிறுத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் ஓமானுக்கான முகவர் நிறுவனமாக மெசூன் ட்ரவல்ஸ் கருத்து தெரிவிக்கையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்லை ஓமானுக்கு மீணடும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். மிஹின் லங்காவின் பதிவுகள் அனைத்தையும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு மாற்றம் செய்யவுள்ளோம் என்றார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435