கட்டாரிலிருந்து 273 பேருடன் வரவிருந்த விமான சேவை திடீர் இரத்து

கட்டாரிலிருந்து 273 இலங்கையர்களை நாளை அழைத்து வரவிருந்த விமான சேவையை தற்காலிகமாக இரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜிவ் சூரியராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

நாளை (26) காலை 5.45 மணியளவில் டோஹா கட்டாரியில் இருந்து 273 பயணிகளுடன் குறித்த விமானம் இலங்கைக்கு பயணிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்களில் பலருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்படுகின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435