கத்தார், சவுதியில் இருந்து நாடுதிரும்பிய மேலும் 6 பேருக்கு கொரோனா

நாட்டில் நேற்று (27) 23 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

சேனபுர புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த 17 கைதிகளுக்கும், கத்தாரில் இருந்து நாடு திரும்பிய 5 பேருக்கும், சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 805 ஆக உயர்வடைந்துள்ளது.

கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 15 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது.

673 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435