காணாமல் போய் கடவுச்சீட்டு மீண்டும் கிடைத்ததா?

கடவுச்சீட்டு காணாமல் போயிருப்பின் அல்லது களவாடப்பட்டிருப்பின் உடனடியாக 011 532 9502 அல்லது 011 532 9501 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருக்கும் இலங்கையர்கள் அவர்கள் இருக்கும் நாடுகளில் கடவுச்சீட்டுக்களை தொலைத்திருந்தால் உடனடியாக அந்நாட்டிலுள்ள பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யுமாறும் தொலைந்த கடவுச்சீட்டுக்கள் மீண்டும் கிடைப்பின் அதனை மறுபடி பயன்படுத்த வேண்டாம் என்றும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் உள்ளவர்கள் கடவுச்சீட்டு தொலைந்தமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தமைக்கான நகலை அந்நாடுகளிலுள்ள இலங்கை தூதரங்களில் சமர்ப்பிக்கப்படுமாயின் உடனடியாக இலங்கை குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்படும் என்றும் அதேபோல் வேறு இலங்கையர்களின் கடவுச்சீட்டு கண்டெக்கப்படுமாயின் உடனடியாக குடியகழ்வு திணைக்களத்திற்கு தெரியப்படுத்துமாறும் திணைக்களம் புலம்பெயர் மக்களிடம் கோரியுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435