சவுதியிலிருந்து நாடுதிரும்பிய 9 பேருக்கு கொரோனா

சவுதி அரேபியாவில் இருந்து நாடுதிரும்பிய 9 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறுதியானது.

அவர்கள் அனைவரும் றியாத்தில் இருந்து நாடுதிரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், பங்களாதேஷிலிருந்து நாடுதிரும்பிய 2 பேருக்கும், பிலிப்பைன்ஸிலிருந்து வந்த அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும், ஈரானில் இருந்து வந்த கடல் தொழிலாளர் ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

நேற்றைய தினம் 13 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2,094 ஆக அதிகரித்துள்ளது.

ஆயிரத்து 967 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடுதிரும்பியுள்ளனர்.

116 பேர் வைத்திசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435