குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அறிவித்தல்

கொவிட்-19 பரவலை தடுக்கும் நோக்கில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களுக்கு பொது மக்கள் பிரவேசிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று (06) முதல் எதிர்வரும் 9 ஆம் திகதிகள் வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தால் வழங்கப்படும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான கடமை நேரங்களான காலை 8 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கடவுச்சீட்டு பிரிவை தொடர்பு கொள்வதற்காக 070 710 10 60 அல்லது 070 710 10 70 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குடியுரிமை பிரிவை தொடர்பு கொள்ள வேண்டுமாயின் 070 710 10 30 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைக்குமாறும், வீசா பிரிவை தொடர்பு கொள்ள 070 710 10 50 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435