குவைத்தில் அதிகரிக்கும் வாகன விபத்துக்கள்!

கடந்த 11 மாதங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் 425 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4000 பேர் காயமடைந்துள்ளனர் என்று குவைத் தகவல் மற்றும் தரவு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாகன விபத்துக்கள் தொடர்பில் ஆராய்ந்து அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கைக்கமைய அதிக வேகமாக வாகனம் ஓட்டியமை, வீதி விதிகளை மீறியமை, பிழையான முறையில் முன்னோக்கி செல்ல எத்தனித்தமை என்பன இம்மரணங்களுக்கு காரணம் என்று அடையாளங்காணப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 47 பேரும், பெப்ரவரி மாதம் 43 பேரும், மார்ச் மாதம் 32 பேரும் ஏப்ரல் மாதம் 30 பேரும், நவம்பர் மாதம் 32 பேரும் வாகன விபத்துக்களினால் உயிரிழந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435