குவைத்தில் பணியாற்றச் சென்ற இரண்டு இலங்கைப் பெண்கள் மரணம்

குவைத்தில் பணியாற்றச் சென்ற இரண்டு இலங்கை பணிப்பெண்கள் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வெல்லம்பிடிய மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில் இருந்து பணிப்பாக குவைத் சென்றவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த மரணங்கள் சந்தேகத்திற்கிடமானது என அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வெல்லம்பிடிய – வதுல்லவத்தை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய முனிசாமி மாரன்னன் கௌரி என்ற இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு குவைத்தில் பணிபுரிவதற்காக சென்று உயிரிழந்தார்.

இதேவேளை, சிலாபம் – முகுணுவடுவன பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய இருபிள்ளைகளின் தாய் குவைத்தில் பணிப்புரிவதற்காக சென்று உயிரிழந்தார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஊடக பேச்சாளர் உபுல் தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435