குவைத்தில் பாதிக்கப்பட்ட 35 பெண்கள் நாடு திரும்பினர்

வீட்டுப்பணிப்பெண்களாக குவைத் சென்று பல்வேறு துன்பங்களை அனுபவித்து பாதிக்கப்பட்ட 35 பெண்கள் நேற்று (29) நாடு திரும்பினர்.

விசேட விமானத்தின் மூலம் குறித்த பாதிக்கப்பட்ட பெண்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.

குவைத்திலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திலுள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பெண்களே இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

2016ஆம் ஆண்டு ஆரம்பம் தொடக்கம் இது வரை குவைத் காப்பகத்தில் தங்கியிருந்த சுமார் 1183 பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, சவுதி அரேபிய தூதரகத்தின் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 9 பெண்களும் நாடு திரும்பினர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435