குவைத் சர்வதேச விமான நிலையம் மீண்டும் 24 மணிநேரமும் திறப்பு

குவைத் சர்வதேச விமான நிலையம் மீண்டும் 24 மணிநேரமும் திறந்திருப்பதாக அந்த நாட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த 17ஆம் திகதி முதல் 24 மணிநேரமும் விமான நிலையம் திறந்திருப்பதாக குவைத் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக குவைத் விமான நிலையம் கடந்த 06 மாதங்களாக முழுமையாக மூடப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில், விமான நிலையம் 24 மணிநேரமும் திறந்திருப்பதனால், அந்த நாட்டில் உள்ளவர்களிடம் தங்களின் தாய் நாடுகளுக்கு செல்வதற்கான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435