கைக்குலுக்கியதால் இலங்கையர் கைது- குவைத்தில் சம்பவம்

அடுத்த வீட்டில் வசிக்கும் குவைத் பெண்ணொருவருடன் கைகுலுக்கிய இலங்கை சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழ்த்து கூறும் வகையில் கைகுலுக்கியமையினாலேயே இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தவறான நோக்கில் தன் கைகளை தொட்டு விட்டு குறித்த நபர் தப்பியோடினார் என்று குறித்த பெண்தரப்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குவைத் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த சாரதியிடம் நடத்திய விசாரணைகளில் அவர் வாழ்த்து தெரிவிக்கும் நோக்கில் கைக்குலுக்கியதாக தெரியவந்துள்ளது.

சாரதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குவைத் நகர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் பொது அரசத்தரப்பு தெரிவித்துள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435