கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர்களுக்கு பொதுமன்னிப்பு

கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் கொரியாவில் எவ்விதமான சட்டபூர்வ தடைகள் அல்லது தண்டனைகளின்றி தமது தாய்நாட்டுக்கு திரும்புவதற்கான பொது மன்னிப்பு காலத்தை வழங்க அந்த நாட்டு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பொது மன்னிப்பு காலம் 02.10.2018 முதல் 02.03.2019வரையான 5 மாத காலப்பகுதிக்கு அமுலில் இருக்கும் எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நீங்கள் கொரியாவில் பணிபுரியும் இலங்கையராயின் உங்கள சக பணியார்களுடன் இந்தத் தகவலை பகிரிந்து அவர்களை தெளிவுபடுத்துங்கள்.

கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பீர்களாயின், இந்த பொது மன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி உங்கள் தாயகத்திற்கு மீளத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435