கொரியாவில் 3800 க்கும் அதிகமானோருக்கு விசா இல்லை

கொரியாவில் தொழிலுக்கு சென்ற தொழிலாளர்கள் தங்களது விசா காலம் நிறைவடைந்த பின்னரும் அங்கு சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக கொரிய மனிதவள பிரிவு தெரிவித்துள்ளது.

கொரிய மனித வள பிரிவும் இலங்கை வெளிநாட்டு தொழிலாளர் பணியகமும் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

3800 க்கும் அதிகமானோர், அதாவது  கொரியாவில் பணிபுரிபவர்களில் 17% க்கும் அதிகமானோர் இவ்வாறு தங்கி இருக்கின்றனர்.

இலங்கை அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்கள் மூலம் இது தொடர்பில்
தெளிவு படுத்துகின்றபோதும் பிரதிபலன் கிடைக்கவில்லை.

இதன்மூலம் கொரியாவில் இலங்கைக்கு கிடைக்கும் தொழில் கோட்டாவில் சிக்கல் நிலை உருவாகும் என இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435