கொரோனா கட்டுப்பாட்டுக்கமையவே விமானசேவை- தூதரகம்

இலங்கையில் கொரோனா கட்டுப்படுத்தல் செயற்பாட்டுக்கமையவே அடுத்த விமானத்திற்கான திகதி அறிவிக்கப்படும் என்று சவுதிக்கான இலங்கை தூதரகம் அதன் உத்தியோகப்பூர்வ முகப்புத்தக பக்கத்தில் செய்தி வௌியிட்டுள்ளது.

இலங்கைக்கு செல்லும் விமானம் குறித்த விபரங்களை அறிந்துகொள்ளும் நோக்குடன் சவுதியில் பணியாற்றும் இலங்கையர்கள் தொடர்ச்சியாக தூதரகத்திற்கு தொலைபேசி அழைப்புகளை எடுத்துவருகின்றனர். இலங்கையில் தற்போது கொவிட் -19 வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக விமான நிலையம் அமையப் பெற்றுள்ள பிரதேசங்கள் உட்பட பல மாவட்டங்கள் அதீத கண்கானிப்புக்குட்பட்டுள்ளது. அப்பிரதேசங்களுக்கு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே இலங்கை கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாட்டுக்கு அமைவாகவே அடுத்த விமானத்துக்கான திகதி தீர்மாணிக்கப்படும். இலங்கையிலுள்ள அதிகாரிகளிடமிருந்து புதிய திகதிகள் தொடர்பான தகவல் கிடைக்கப் பெற்ற உடனே பொது மக்களுக்கு இது தொடர்பாக அறியத்தருகின்றோம் என்று தூதரகம் அறிவித்துள்ளது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435