சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு கொரியாவில் பொதுமன்னிப்பு

சட்டவிரோதமான முறையில் தென் கொரியாவில் தங்கியிருக்கும் பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

01.10.2018 முதல் 31.03.2019 வரை இந்த பொதுமன்னிப்பு காலம் அமுலில் இருக்கும்.

கொரியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் பணியாளர்கள் இந்த பொது மன்னிப்பு காலத்தை பயன்படுத்தி, அங்கிருந்து தமது சொந்த நாடுகளுக்கு திரும்பினால், சட்டவிரோதமான முறையில் அங்கு தங்கியிருப்பதால் விதிக்கப்படும் மீள்திரும்பல் தடையை முழுமையாக நீக்க கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் கொரியாவில் தங்கியிருந்ததால், அந்நாட்டு அதிகாரிகளினால்; கைதுசெய்யப்பட்டு, நாடுகடத்தப்பட்டால், 10 வருடங்களுக்கு கொரியாவுக்கு மீள்திரும்ப தடை விதிக்கப்படும்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435