சிங்கப்பூரில் 41 கட்டிடத் தொழிலாளர்களுக்கு ஷிகா வைரஸ் தொற்று

கட்டிட நிர்மாணத் தொழிலாளர்கள் பலர் ஷிகா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரையில் ஷிகா வைரஸ் தொற்றுக்குள்ளான 41 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு தொழிலுக்காக வந்த கட்டிட நிர்மாணத் தொழிலாளர்கள் என்றும் அச்செய்திகள் குறிப்பிடுகின்றன.

வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றவர்களில் 34 பேர் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்துள்ளனர் என்றும் ஏனையோர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நுளம்பினால் பரவும் ஷிகா வைரஸ் தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் தலைகள் சிறிதாக காணப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435