சைப்பரஸில் முதியோர் பராமரிப்பாளர் கைது

​சைப்பரஸில் முதியவர் ஒருவர் தவறுதலாக வாகனத்தில் மோதி உயிரிழந்ததையடுத்து அவ்வாகனத்தை ஓட்டிய இலங்கைப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சைப்பரஸில் முதியோர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை பெண் (39) அவர் பணியாற்றும் வீட்டில் உள்ள வாகனத்தை திருப்பும் போது அதன் அருகில் நின்றிருந்த 90 வயது நபர் மோதி உயிரிழந்துள்ளார்.

குறிந்த முதியவர் கைது செய்யப்பட்ட பெண் பராமரித்து வந்த முதியவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை (4) ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில் நிகோலஸ் பிஸிலிடஸ் என்ற 90 வயது நபர் உயிரிழந்துள்ளார்.

பகலுணவுக்காக குறித்த முதியவரை வௌியில் அழைத்துச் சென்ற பெண் மீண்டும் அழைத்து வந்து அவரை வாகனத்தில் இருந்து இறக்கி விட்டு வீட்டுக்குள் செல்லுமாறு கூறிவிட்டு வாகனத்தை திருப்பும் போது அம்முதியவர் வீட்டுக்குள் செல்லாமல் அவ்விடத்திலேயே நின்றிருந்தமையினால் தவறுதலாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

காயங்களுக்குள்ளான நபரை நிகோஸியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார் என்று அந்நாட்டு செய்திப்பத்திரிகையான சைப்ரஸ் மெயில் செய்தி வௌியிட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435