UAEயில் வெப்பமும் மணற்சூறாவளியும் தாக்கும் அபாயம்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பல பகுதிகளில் இன்று (02) காலை நேரத்தில் மூடுபனி நிலவுகிற போதிலும் நன்பகலாகும் போது 49 செல்சியஸ் தொடக்கம் 50 செல்சியஸாக அதிகரிக்கும் என்று அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

எனினும் வெப்பநிலை 59 செல்சியஸ் வரையில் உணரப்படும் என்றும் வாகன சாரதிகள் வாகனங்களில் பயணிக்கும் போது அவதானமாக இருக்குமாறு அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

வௌியில் செல்லும் போது பாதுகாப்பான முறையில் செல்லுமாறும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிழக்கு மற்றும் சில தெற்கு பகுதிகளில் பிற்பகல் அதிக மேக மூட்டத்துடன் மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாகவும் கடுங்காற்றின் காரணமாக மணற்சூறாவளி ஏற்படக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435