ஜெருசலேம் சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டில் இலங்கையர் கைது

ஆறு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் ஜெருசலேமில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெருசலேமில் சட்டவிரோதமாக துப்புறவு பணியாளராக பணியாற்றிய உதிஷ பிரியங்கர என்ற 46 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெருசலேமில் பராமரிப்பாளராக மட்டுமே பணியாற்ற வீஸா அனுமதி பெற்றிருந்த குறித்த நபர் சட்டவிரோதமாக வீட்டுத் துப்புறவு பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். குறித்த வீட்டில் சுமார் 3 வருடங்காக பணியாற்றியுள்ளார்.

குறித்த நபர் வீட்டில் குளியலறையை துப்புறவு செய்து கொண்டிருந்தபோது சிறுமி அவருடன் உரையாட முற்பட்ட வேலையே இவ்வாறு தவறாக நடக்க முற்பட்டுள்ளார். அத்தருணத்தில் தாய் அருகிலிருந்த அறையில் உறங்கிக்கொண்டிருந்துள்ளார். குறித்த சிறுமி அந்நபரை தள்ளிவிட்டு விட்டு தாயிடம் ஓடிச்சென்று முறையிட முற்பட்ட போது சந்தேகநபர் தப்பியோடியுள்ளார் என்று இஸ்ரேல் நேஷனல் நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435