டுபாயில் கடற்கரைக்கு செல்வோர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள்

டுபாயில் கடற்கரைக்கு செல்வோர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை அந்நாட்டு சுகாதார ஆணைக்குழு அறிவித்துளளது

டுபாயின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடற்கரைக்கு வார இறுதி நாட்களில் அதிகமானோர் வர தொடங்கியுள்ளயதையடுத்து அனைவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என அந்நாட்டு சுகாதார ஆணைக்குழு அறிவித்துளளது

கடற்கரை அல்லது கடலில் நீந்தும்போது அனைத்து நேரங்களிலும் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்று ஆணைக்குழு தெரிவித்தள்ளது.

தண்ணீரில் இருக்கும்போது முககவசம் அணிய தேவையில்லை. அதுவே கடற்கரை பகுதியில் உலாவும்போது முககவசம் அணிந்து செல்ல வேண்டும். கடற்கரைக்கு செல்வோர் தாங்கள் பயன்படுத்தும் துண்டு, நிழற்குடை, குடிநீர் போத்தல்கள் ஆகியவற்றை தனியாக ஒருவர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவர்களுடன் தங்களது எந்த தனிப்பட்ட பொருட்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கடற்கரை பகுதிகளில் உள்ள பொதுக்கழிப்பிடங்கள் மற்றும் ஓய்வு அறைகளுக்கு செல்லும்போது சானிட் டைசர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எப்போதும் உங்களுடன் சானிட்டைசர் மற்றும் ஈரமான திசு காகிதங்களை வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் கூடுதலாக பிளாஸ்டிக் பையில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட முககவசத்தை வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தை கைகளால் தொட்ட பிறகும், சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும் கைகளை சுத்தமாக சவர்க்காரத்தைப் பயன்படுத்தி கழுவ வேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களை சுகாதார ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ள

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435