தென்கொரியா வாழ் இலங்கையர் அச்சமடைய தேவையில்லை

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்கள் தொடர்பில் தாம் அவதானத்துடன் செயற்படுவதாக தென்கொரியா உறுதியளித்துள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியம் தெரிவித்துள்ளது.

கொரிய குடாவில்; நிலவும் பிரச்சினைகள் காரணமாக தாம் அங்கு பணியாற்றும் இலங்கையர் தொடர்பில் கவனம் செலுத்துவதாக தென் கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தென்கொரியாவில் 25 ஆயிரம் இலங்கையர்கள் தொழில் புரிகின்றனர்.

அனர்த்த நிலைமைகள் ஏற்படின் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435