தொழிலாளர்களுக்கு வரவு-செலவுத் திட்டத்தில் கொடுப்பனவு? முடிவு பிரதமரிடம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாளாந்த வேதனத்துடன், ஒரு தொகை கொடுப்பனவை எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக அதிகரித்து வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது, கூட்டணி தலைவர் அமைச்சர் மனோ கணேசன், பிரதி தலைவர்களான அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சர் ராதாகிருஸ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திலகராஜ், அரவிந்த் குமார் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, தொழில் அமைச்சர் ரவீந்தர சமரவீர ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னைய கோரிக்கையின்படி தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத்தின் தலையீடு அவசியம் என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக தற்காலிக தீர்வாக அரசாங்கத் தரப்பில் நாள் வேதனத்துடன் ஒரு தொகை பங்களிப்பினை செய்வதற்கும் ஒரு வருட காலத்திற்கு உள்ளாக பெருந்தோட்டத்துறை முகாமை முறையை மறுசீரமைப்பதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மேற்படி தொகை அதிகரிப்பு அறிவிக்கப்படலாம் எனவும், மேலதிக விபரங்களை பிரதமருடன் கலந்துரையாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435