தோஹாவில் இலங்கை தொழில் முனைவோர் சங்கம் உருவாக்கம்

கட்டாரில், தோஹாவை தளமாகக் கொண்ட இலங்கை இறக்குமதியாளர்கள் இலங்கை தூதரகத்துடன் இணைந்த இலங்கை தொழில்முனைவோர் சங்கத்தை நிறுவியுள்ளனர்.

கட்டார் சந்தையில் உயர் தரத்துடன் குறிப்பிடத்தக்க இலங்கை இறக்குமதியை உறுதி செய்வதே இச்சங்கத்தின் நோக்கமாகும்.

இலங்கை ஏற்றுமதியாளர்களுடன் கட்டாரில் இலங்கை பொருட்களின் இறக்குமதியாளர்களுக்கு இடையே ஒரு பாலத்தை உருவாக்குவதன் மூலம் இலங்கையிலிருந்து கட்டார் வரை இறக்குமதி செய்வதை இச்சங்கம் ஊக்குவிக்கும். இறக்குமதியைபன்முகப்படுத்த அந்நாட்டு இறக்குமதியாளர்களை ஊக்குவிக்கும்.

இலங்கை பொருட்களின் தோஹாவை தளமாகக் கொண்ட இறக்குமதியாளர்களுக்கு இறக்குமதி வர்த்தகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இலங்கை தூதரகம் மற்றும் கட்டாரி அதிகாரிகளின் ஆதரவில் சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது என்பதையும் குறித்து அச்சங்கம் கவனம் செலுத்தும்.

தோஹாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் உள்ள சார்ஜ் டி அஃபைர்ஸ், ரத்னசிங்கம் கோகுலரங்கன், தூதரகத்தின் இணைப்பு கடிதத்தை சங்கத்தின் தலைவர் இளவரசர் ஸ்டீபனுக்கு வழங்கினார். கட்டார் மற்றும் இலங்கையில் இருந்து இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே உறவுகளை இலகுபடுத்தும் வகையில் இச்சங்கம் செயற்படும் என்றும் சங்கம் சந்தை தேவை குறித்து இரு தரப்பினருக்கும் தௌிவுபடுத்தும் என்றும் சங்கத்தின் பொதுச் செயலாளர் அனோஜா ஜீவானி குறிப்பிட்டார்.

thepeninsulaqatar

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435