நாடு திரும்ப 40,000 பேர் வரை எதிர்பார்த்துள்ளனர்

வௌிநாடுகளில் உள்ள சுமார் 40,000 நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளனர் என்று சண்டே மோர்னிங் இணையதளம் செய்தி வௌியிட்டுள்ளது.

நாடு திரும்ப எதிர்பார்த்து்ள 40,000 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடைமுறைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சின்தொற்றுநோய் பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதங்களில் சுமார் 40,000 இலங்கையர்களை வௌிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எனினும் கொவிட் 19 வழிமுறைகளுக்கமைய அனைவரும் ஒன்றாக நாட்டுக்கு அழைத்து வரப்படமாட்டார்கள். நாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் வசதிகளுக்கேட்ப கட்டம் கட்டமாக அவர்கள் அழைத்து வரப்படுவார்கள். இலங்கையில் தற்போது தனிமைப்படுத்தல் வசதிகள் போதியளவு உள்ளன. போதியளவு தனிமைப்படுத்தல் நிலையங்கள் உள்ளன.

குறிப்பாக சமூகத்திலும் கடற்படையிலும் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435