நைஜீரிய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 7 இலங்கை மாலுமிகள்

சட்டவிரோதமான முறையில் கப்பலுக்கு எண்ணெய் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு நைஜீரிய கட்ற்படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கையின் 7 மாலுமிகளும் தங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு  இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த 7 மாலுமிகளும் தற்போது நைஜீரிய பொருளாதார மற்றும் குற்றவியல் ஆணைக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காகவே குறித்த 7 பேரையும் அந்த ஆணைக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நைஜீரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முறையான அனுமதிப் பத்திரம் இன்றி 838 மெடரிக் தொன் கச்சா எண்ணெய் கப்பலில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டே குறித்த 7 மாலுமிகளும் கைது செய்யப்பட்டதாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435