பாலியல் அடிமைகளாக விற்கப்படும் இலங்கை சிறுமிகள்

இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சிறுமிகள் சவுதி அரேபியாவில் பாலியல் அடிமைகளாக விற்பனை செய்யப்படுவதாக சவுதி இளவரசியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸ் சஞ்சிகையான ‘லீ மொண்டெவில்’ மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான அல்வலீத் பின் தலால் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவரின் முன்னாள் மனைவி அமீரா பின்த் அய்தான் பின் நயீப் சவுதியில் பாலியல் அடிமைகளாக சிறுமிகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

இளவரசி அமீராவின் மேற்படி தகவல்களைக் கொண்ட நேர்காணல், கடந்த ஞாயிறுக்கிழமை, பிரான்ஸ் சஞ்சிகையான ‘லீ மொண்டெவில்’ வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், ரோமானியா மற்றும் பல்கேரியா போன்ற நாடுகளின் அழகான அநாதைச் சிறுமிகள் சவுதி அரேபியாவில் பாலியல் அடிமைகளாக விற்பனை செய்யப்படுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

பெரும் பணக்கார குடும்பங்கள் மது மற்றும் போதை மருந்துகளையும் பாவிக்கின்றனர். அந்தக் குடும்பங்களுக்குள்ள செல்வாக்கு காரணமாக பொலிஸாரும் அவர்களைக் கண்டு கொள்வதில்லை.

தற்போதைக்கு சவுதியில் பல்வேறு குடும்பங்கள் ஒன்றிணைந்து ஆடிப்பாடி மகிழும் களியாட்ட வைபவங்கள் தாராள மது பரிமாறலுடன் நடைபெறத் தொடங்கியுள்ளன.

அங்கு பாலியல் அடிமையாக விற்கப்படும் சிறுமிகளின் நடனம் அரங்கேற்றப்படுகின்றது.

குறித்த சிறுமிகளை பணம் கொடுத்து வாங்கும் நபர்களின் கட்டுப்பாட்டை விட்டு அவர்கள் வெளியில் இறங்கவே முடியாது என இளவரசி அமீரா இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435