புலம்பெயர் தொழிலாளர் பணம் அனுப்புவதில் வீழ்ச்சி – மத்திய வங்கி

கடந்த ஏப்ரல் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவது மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் தொடக்கம் அந்நிய செலாவணி வீழ்ச்சியடைய ஆரம்பித்த போதும் ஏப்ரல் மாதத்தில் 32.3 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 375 மில்லியன் அமெரிக்க டொலர் குறைவடைந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் இத்தொகை 553.7 மில்லியன் அமெரிக்க டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகெங்கிலும் பொருளாதார நடவடிக்கைகள் பெரும்பாலானவை நிறுத்தி வைக்கப்பட்டன, மேலும் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க வீடுகளில் பாதுகாப்பாக இருக்கமாறு சுகாதார அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

ஏப்ரல் மாதத்தில் செங்குத்தான சரிவு இருந்தபோதிலும், ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கு பணம் அனுப்புவதில் ஒட்டுமொத்த வீழ்ச்சி கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியிலிருந்து 9 சதவீதம் மட்டுமே உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்த நான்கு மாதங்களுக்கு, இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 1,975.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர், இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 2,170.9 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435