பொது மன்னிப்பு காலத்தை ஜூலை 23 வரை நீடித்துள்ளது சவூதி

சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


கடந்த மார்ச் 21 ஆம் திகதி முதல் ஜூன் 25 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டிருந்தது.

தொழில் கால ஒப்பந்தம் முடிவடைந்து சவூதியில் தங்கியிருக்கும் அனைவரும் அங்கிருந்து வெளியேறுவதற்கான பொது மன்னிப்புக் காலம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பு காலத்தில், 4 ஆயிரத்து 500 இலங்கையர்கள் சவூதியிலிருந்து நாடு திரும்பியதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435