போதைப்பொருள் கடத்தல் குற்றத்தில் இலங்கையர் ஒருவர் தாய்லாந்தில் கைது

போதைப் பொருட்கள் கடத்தல் ஒன்றுடன் தொடர்பு கொண்ட இலங்கையர் ஒருவர் தாய்லாந்தின் பேங்கொக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்குள்ள விருந்தகம் ஒன்றில் வைத்து பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டதாக, அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் அவர் அங்கு சென்றுள்ளார்.

அவர் மீது போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435