மத்திய கிழக்கிற்கு செல்லும் பணிப்பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் இருந்து கடந்த வருடம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்றவர்களின் எண்ணிக்கை 16 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளின் தகவல்களை மேற்கொள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியா, குவைட் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு அதிகளவில் பணிப்பெண்கள் சென்றுள்ளனர்.

குறித்த நாடுகளுக்கு கடந்த 2018ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையில் இருந்து 64 ஆயிரத்து 965 பேர் சென்றுள்ளனர்.

இதேநேரம்,. 2017ஆம் ஆண்டு 55 ஆயிரத்து 884 பேர் இலங்கையில் இருந்து சென்றுள்ளனர்.

இதற்கமைய, இலங்கையில் இருந்து கடந்த வருடம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்றவர்களின் எண்ணிக்கை 16 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435