மத்திய கிழக்கில் இருந்து நாடு திரும்பிய மேலும் 14 பேருக்கு கொரோனா

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேருக்கு நேற்று (19) இலங்கையில் கொவிட்-19 தொற்று உறுதியானது

சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 9 பேருக்கு இறுதியாக தொற்று உறுதியானது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும், கட்டாரில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 3 பேருக்கும் கொவிட் 19 தொற்று உறுதியானது.

இதேநேரம், இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும், கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தொற்று உதியானவருடன் தொடர்பை பேணிய 4 பேருக்கும் நேற்று கொவிட் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதற்கமைய, நாட்டில் 20 பேருக்கு நேற்று கொவிட் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொவிட் 19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 724 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 12 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 35 ஆக உயர்வடைந்துள்ளது.

678 கொவிட் 19 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று இரவு 10.20 மணிக்கு வெளியிட்ட கொரோனா நிலவர அறிக்கை கீழே

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435