மத்திய கிழக்கு பணியாளர்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள உயர்ஸ்தானிகராயலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் பாதுகாப்பு விடுதிகளில் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தங்கி இருக்கும் இலங்கை பணியாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு விடுதிகளில் தங்கி இருப்பவர்களின் பிரச்சினைகளை விரைவில் தீர்க்கப்பட்டு அவர்களை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய, பாதுகாப்பு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை இலங்கைக்கு அழைத்துவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதனால், இந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435