மரண தண்டனையிலிருந்து இலங்கையர்கள் பொதுமன்னிப்புடன் மீட்பு

குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களை பொதுமன்னிப்புடன் காப்பாற்றி இருப்பதாக அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆண், ஒருவரும், பெண் ஒருவருமே இவ்வாறு மரண தண்டனையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

குவைத்தில் மற்றுமொரு இலங்கையரை கொலை செய்தமைக்காக இலங்கையைச் சேர்ந்த ஆண்’ ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர​ைந்த 43 வயது பெண் ஒருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தாருக்கு நட்டஈட்டை வழங்கி, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் கொலைக்குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர் மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குவைத் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணும் மீட்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435